Friday, March 21, 2014

சிறகுகள் முளைக்கும்

முட்டையை எடுத்து மூடி வைத்து
குஞ்சு பொரித்ததும் மறைத்து காத்து
குழந்தை போல வளர்க்கலாம் கொஞ்சகாலம்
நித்தம் நித்தம் அது தானாய் வளரும்
கொஞ்சம் கொஞ்மாய் காரணம் படிக்கும்
கேள்வி கேட்டு தினம் நச்சரிக்கும்
கொஞ்ச காலம் தத்தளிக்கும்
காவலில் இருப்பதை கண்டுபிடிக்கும்
சின்ன சின்னதாய் சினமும் கொள்ளும்
செய்வதரியாது முரண்டு பிடிக்கும்
முட்டிமோதி அட ஆர்ப்பரிக்கும்
ஆசை கனவை அடைய நினைக்கும்
வாழ்க்கை பயனை காண நினைக்கும்
வண்ண வண்ணமாய் சிறகும் முளைக்கும்
வெடவெடவென விண்ணில் பறக்கும்
வானவில்லையும் வளைத்து ஒடிக்கும்..

No comments:

Post a Comment