Saturday, March 22, 2014

உண்மையில் நீ இல்லை

எண்ணம் ஒன்று சேர
கண்ணில் நீர் வழிய
மனதில் சஞ்சலத்துடன்
மருகி மன்றாட
உண்ண நினைவில்லாமல்
உறக்கம் உணராமல்
உந்தன் பெயரை நொடிக்கொருமுறை
உதடு சொல்ல
கண்ணுறங்காது காவல் காத்திருக்க
கண்ணிமைக்கும் பொழுதில்
கணநொடியில் வாழ்வை நீ
தட்டி பறிக்க
தவமிருந்தும் பயனில்லை
விழித்திருந்தும் விடையில்லை
உண்மையில் நீ இல்லை!

No comments:

Post a Comment