Saturday, September 6, 2014

புதிதாய் பிறக்கிறேன் அவ்வப்போது..

ஏழு பிறவிகள் உண்டா என்பது என் அறிவுக்கு எட்டாத ஒன்று. எனவே இல்லை என்பது என் பதில் இன்றுவரை. இந்த நாத்திகம்  ஒருபக்கம் இருந்தாலும் நாம் புதிதாய் பிறக்கிறோம் என்பது இன்று முதல் என் எண்ணங்களில் ஒன்றாக இருக்கும். அது எழு முறையன்று எழுபது முறைகளாகவும் இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம் அது அவரவர் அனுபவங்களையும் அவர்களின் தன்மையும் பொருத்தது என தோன்றுகிறது.வாழ்வின் சில தருணங்கள் நம்மை புதிதாய் பிறக்க வழிவகுக்கின்றன.சில நியதிகள் மற்றும் நம்பிக்கைகளின் என்னுள் அன்று தன் இறுதி நாளை சந்திக்கின்றது..சில கோட்பாடுகள் சுக்குநூறாக உடைகின்றன மேலும் சில வளைந்து நெளிந்து புது உருவெடுக்கின்றன.சில நம்பிக்கைகள் புதிதாய் தோன்றுகின்றன பல சிந்தனைகளின் வேகமும் திசைகளும் முழுமையாக புதிய பரிமாணங்களை  தன்னுடையதாயாக்கிக் கொள்கின்றன.சில மாற்றங்களில் சில இழப்புகளில் சில பிறப்புகளில் தினமும் புதிது புதிதாய் பிறக்கறேன் அவ்வப்போது..

No comments:

Post a Comment