Monday, September 8, 2014

உன் தரம் என்றும் நிரந்தரம்

மனிதனால்
படபடவென ஒடிக்கப்பட்டு
சரசரவென இழுக்கப்பட்டு
கரகரவென அறுக்கப்பட்டு
மளமளவென தேய்க்கப்பட்டு
கொடுமைகளை அனுபவித்தும்
தன் உறுதி இழக்காத மரப்பொருட்கள்
என்னை பார்த்து சொல்லும் பாடம்
உலகமே உன்னை வாட்டினாலும்
உன்னை நீ மாற்றாதே
உன் தரம் என்றும் நிரந்தரம்!

No comments:

Post a Comment