Thursday, July 17, 2014

மழை பெய்யும் இன்று

லேசாக எட்டிப்பார்க்கிறது தூரல்... மழை பெய்யக்கூடும் என்பதனால் குடையுடன் கிளம்புகிறேன் இன்று. வேண்டும் வேண்டாம் என நான் முடிவெடுக்க முடியாத சிலவற்றில் குடைக்கு என்றும் முதலிடம் உண்டு.. அடைமழை பெய்யும் நேரங்களில் அதன் இருப்பு தரும் தைரியம் அபரிதமானது... இந்த  ஈரக்காற்றும் குளிர்ந்த நீரும் உடலில் பட்டதும் மூளையை எப்படி மழுங்கடிக்க செய்யகின்றது என்பது புரியவில்லை..
முந்தைய நாள் இருமல், பிடிக்காத இஞ்சிக்கசாயம்,பாலுடன் கசக்கும் தூதுவளை இலை,தொண்டையில் எரிச்சல் கொடுக்கும் வெற்றிலை என அனைத்தும் மறந்துபோகும் அது என் தேகம் பட்ட நொடியில்...இத்தனையும் மனதிலிருந்தாலும் கடும் காய்ச்சல் கூட இருந்தாலும் ஒரு விரலாவது மழையில் நனைத்தால் தான் தூக்கம் வரும் அன்று...அப்படி ஆசைபடுகிறது மனது..
சாலை ஓரத்தில் மழை பெய்யும் நேரத்தில் நடக்கையில், என் எதிரே பெய்த மழையில் நனைந்து போய் நடந்து வருபவர்களை காண்கையில் மனம் ஆசையில் ஆர்பரிக்கின்றது.கொஞ்சம் நனைய வேண்டும் என நினைக்கிறேன்...இரவில் பெய்த மழை காலையையும் சாலையையும் கண்ணுக்கழகாக மாற்றியிருக்கின்றது.. இன்றும் மழை பெய்யும்.. இன்னும் அழகாக மாறும்..

No comments:

Post a Comment