காட்டை அழித்து களவு செய்து நாட்டை சூறையாடி
மாமக்களை கொன்று சரித்து பட்டினியால் வதக்கி
பிணியால் ஊறவைத்துஅடிபணிய போர் செய்வார்களாம்
இன்று கூட அப்படித்தான் எனக்கு தெரிந்தவரை
சொந்த நாட்டிலிருந்து சோறுடைத்து பாய்மரங்களில்
தானியங்கள் சுமந்து பசி பிணி விரட்டி பாசம் செய்து
நுழையும் போதே வெற்றி முரசு கொட்டப்பட்டு
மக்களால் மலர் மாலை சூடப்பட்டு வியக்கவைக்கும்
விதமாய் போர் நடந்தது இலங்கையில்
ராமன் தோற்றான் உன் முன் போர் முறையில்
உயிரோடிருந்தால் குந்தவை கடிந்து கொண்டிருப்பாள்
சிங்களவன் குலத்தை ஏன் சீர்குலைக்கவில்லை என்று
புத்த விகாரங்களை ஏன் இடித்து நொறுக்கவில்லை என்று
“அருள்மொழி வர்மா!!! ராஜராஜா சோழா!!!”
உன்னிடம் நான் ஒன்று கேட்கிறேன்
“உன் பாதம் பட்ட இடத்தில் ஏன் இப்படி நடக்கிறது??”
பின் குறிப்பு:
குந்தவை – குந்தவை பிராட்டி என வரலாறில் புகழப்படும் ராஜராஜ சோழனின் தமக்கை.