Tuesday, February 18, 2014

கலிகாலம் கலிகாலம்!!!!

சீதையின் கதை சிந்திக்கப்பட வேண்டும்
கணவன் சொன்னால் கட்டையில் ஏற வேண்டும் என்பதை ஆரம்பித்தவள் அவள்
கண்ணகியின் கதை கண்டிக்கப்பட வேண்டும்
கணவன் பின்னால் கேள்வியின்றி நடக்க வேண்டும் என்பதை நியதியாக்கியவள் அவள்
சீதை கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும்
கண்ணகி கணவனை கண்டித்திருக்க வேண்டும்
எனினும் இன்று
சீதையின் கதை புராணம்
கண்ணகியின் கதை காவியம்
கலிகாலம் கலிகாலம்