Saturday, March 22, 2014

உந்தன் வாசம்

இன்னும் கேட்கிறது உன் குரல்
எதிலும்  நிறைகிறது உன் முகம்
இருட்டிலும் தெரிகிறது உன் நிழல்
காற்றில் வருகிறது உன் வாசம்
இன்றும் என்றும் என் வாழ்வில்
வந்து போகும் அத்தனை மகிழ்ச்சியிலும்
உந்தன் வாசம் தினமும் வீசும்..

உண்மையில் நீ இல்லை

எண்ணம் ஒன்று சேர
கண்ணில் நீர் வழிய
மனதில் சஞ்சலத்துடன்
மருகி மன்றாட
உண்ண நினைவில்லாமல்
உறக்கம் உணராமல்
உந்தன் பெயரை நொடிக்கொருமுறை
உதடு சொல்ல
கண்ணுறங்காது காவல் காத்திருக்க
கண்ணிமைக்கும் பொழுதில்
கணநொடியில் வாழ்வை நீ
தட்டி பறிக்க
தவமிருந்தும் பயனில்லை
விழித்திருந்தும் விடையில்லை
உண்மையில் நீ இல்லை!

Friday, March 21, 2014

சிறகுகள் முளைக்கும்

முட்டையை எடுத்து மூடி வைத்து
குஞ்சு பொரித்ததும் மறைத்து காத்து
குழந்தை போல வளர்க்கலாம் கொஞ்சகாலம்
நித்தம் நித்தம் அது தானாய் வளரும்
கொஞ்சம் கொஞ்மாய் காரணம் படிக்கும்
கேள்வி கேட்டு தினம் நச்சரிக்கும்
கொஞ்ச காலம் தத்தளிக்கும்
காவலில் இருப்பதை கண்டுபிடிக்கும்
சின்ன சின்னதாய் சினமும் கொள்ளும்
செய்வதரியாது முரண்டு பிடிக்கும்
முட்டிமோதி அட ஆர்ப்பரிக்கும்
ஆசை கனவை அடைய நினைக்கும்
வாழ்க்கை பயனை காண நினைக்கும்
வண்ண வண்ணமாய் சிறகும் முளைக்கும்
வெடவெடவென விண்ணில் பறக்கும்
வானவில்லையும் வளைத்து ஒடிக்கும்..