Wednesday, December 17, 2014
இந்த மயக்கம் இன்னும் பலரைத் தாக்கும்
Tuesday, September 30, 2014
மழை பெய்த மறுநாள் காலை!
அதிகாலை ஆறரை மணி ஆகின்றது. தினம் நான் நடக்கும் அதே பாதை புதிதாய் தெரிகிறது இன்று. சுடுகாட்டைத் தாண்டி நடந்து கொண்டிருக்கிறேன்.சவம் ஒன்றும் சிதையில் இல்லை. அப்படி இருப்பதை எட்டத்தில் இருந்து கண்டுவிட்டால் அதன் பின் அந்த பக்கம் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. முடிவுகள் என்றும் என்னை ஈர்ப்பதுண்டு. இவைகளை முடிவுகள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை எனெனில் இவை பலர் வாழ்க்கைபக்கங்களை பாதியினில் குழப்பிவிட்டுச் செல்லும் அரைசூத்திரங்கள் என்பதனாலோ என்னவோ.. சீமைக்கருவைகள் முடிந்து தோட்டக்காடு ஆரம்பித்து விட்டது."என்னப்பா உன் இடத்துல மேக்கால முயல் மேயுது போல.. சம்சாரி எப்புடி நீ சுரக்கா விக்கப்போற.. வலைய கிலைய விரிக்கிறது.. இல்லனா கொஞ்சம் திம்மட்ட தூவுறது" என்ற குரல் கேட்கிறது. விவசாயியை பார்த்து பரிதாபப்பட்டாலும் என் கண்ணில் இன்றுவரை அங்கு தென்படாத முயல்களின் மேல் எனக்கு வந்த பரிதாபம அதனை விஞ்சிக் கொண்டு தொண்டையை அடைக்கின்றது. "அதுங்க என்னப்பண்ணும் ரேஷன் கடையில அரிசி இலவசமா கொடுத்தா அதுங்களும் தோட்டக்காட்டுப்பக்கம் வராது நம்ம பயலுவள போல.விளையிததுதான் விளையும்"என்று சிரித்த பட்டிக்காட்டானின் பேச்சில் பொருளாதாரம் மிகத்தெளிவா விளங்கியது.சூரியன் இன்னும் கண் முழிக்கவில்லை. மரங்கள் அனைத்தும் குளுமையில் கிறங்கிக் கிடக்கின்றன. தோட்டக்காடு முடிந்து பொட்டல்வெளிக்கு வந்து விட்டேன் கண்ணுக்கெட்டும் தூரம் தெரியும் இடமெல்லாம் இரவில் பெய்த மழை நனைத்திருக்கின்றது. கல்லும் மணலுக்கும் போக மீதமான மழை நீர் சின்னச்சின்ன வரிகளாகத் தொடங்கி ஓடையில் ஒன்று சேர்ந்து சலசலவென தெளிவாக ஒடுவது என்னவொரு அழகாக இருக்கிறது. தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மிதமிச்சமானதை வாரி இறைப்பதில் இயற்கையை மிஞ்ச ஆளில்லை. குளத்தில் சாய்ந்து கிடக்கும் கருவேல மரங்களில் பூத்த அந்த மஞ்சள் மலர்கள் கண்ணை கவர்கின்றன.குளத்தங்கரை பனைமரங்கள் ஒரு பக்கம் நனைந்து மறுபக்கம் மழையில் நனையாததால் வாடைக்காற்றின் வேகத்தில் வருத்தத்துடன் மெல்ல அசைகின்றன. காலியாக என்னை தினமும் தாண்டிச்செல்லும அந்த அரசுப்பேருந்து குளத்தங்கரையில் ஏற முடியாமல் நின்று விட்டது. நடத்துநரும் ஓட்டுநரும் இறங்கி குனிந்து எதையோ சரி செய்கிறார்கள். அதற்கும் அந்த அழகான இடத்தை தாண்டி செல்ல மனமில்லை போலும். குளத்தின் மடையை தாண்டி மறு கரையில் ஏறி விட்டேன். பக்கத்து மாந்தோப்பினுள் உழுது போட்டிருக்கிறார்கள். மாமரங்கள் பூத்துவிட்டென. சில காய்கள் வேப்பம்பழம் அளவுக்கு அந்தபூக்களின் நடுவே தென் படுகின்றன. பூக்களை பூச்சிகள் கடிக்காதிருக்க மருந்து தெளிக்கிறார்கள்.நாற்றம் நாசியை புரட்டுகிறது. வேகமாக நடக்கிறேன் இப்போது தெளிவான காற்று சுவாசத்தினை சுத்தப்டுத்துகின்றது. மனதுக்கு பிடிக்காதவைகளை விட்டு மனம் மட்டும் ஏன் இவ்வாறு வேகமாக விலகிச் செல்வதில்லை என்பதன் காரணம் புரியவில்லை. இன்னும் என்னென்வோ எண்ணங்கள் கவலை கொடுப்பதற்காக வரிசையில் நிற்கின்றன.பாதையின் குறுக்கே பாம்பொன்று வேகமாக ஓடுகிறது. பயத்தில் அந்த இடத்திலேயே நிற்கிறேன் நான் அது வயக்காட்டுக்ககுள் வேகமாக புகுந்து விட்டது.பயந்தது யாரென்பது எனக்கு புரியவில்லை. முன்னேறுகிறேன் நான் அந்த பாதையில் மழை பெய்த மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன்.
Monday, September 8, 2014
உன் தரம் என்றும் நிரந்தரம்
மனிதனால்
படபடவென ஒடிக்கப்பட்டு
சரசரவென இழுக்கப்பட்டு
கரகரவென அறுக்கப்பட்டு
மளமளவென தேய்க்கப்பட்டு
கொடுமைகளை அனுபவித்தும்
தன் உறுதி இழக்காத மரப்பொருட்கள்
என்னை பார்த்து சொல்லும் பாடம்
உலகமே உன்னை வாட்டினாலும்
உன்னை நீ மாற்றாதே
உன் தரம் என்றும் நிரந்தரம்!
Saturday, September 6, 2014
புதிதாய் பிறக்கிறேன் அவ்வப்போது..
Wednesday, July 30, 2014
Decision
Monday, July 21, 2014
சில தவறுகள் சிரிக்கும்படியாய்!
Thursday, July 17, 2014
மழை பெய்யும் இன்று
Wednesday, July 16, 2014
புரிதலும் குழப்பமும்...
ஒரு ஞாயிறு காலைபொழுது
பக்கத்து வீட்டு நாய் அதிசயமாய் குரைக்கின்றது.மின்சாரம் இல்லாதது அதற்கு மிக வருத்தம் போல..மல்லாக்க படுத்திருக்கிறேன் முதுகு முழுக்க வியர்த்து விட்டது...என்ன செய்வது.. எழுந்திருக்க மனமில்லை..புரண்டு படுக்கிறேன். பால்காரன் கூட வந்துவிட்டான் போல... அவன் சைக்கிள் மணி சத்தம் எங்கோ தூரத்தில் கேட்கிறது...இன்னும் கண் திறக்கவில்லை நான், எங்கோ போகின்ற இருசக்கர வண்டிச்சத்தங்கள் கேட்கிறது.. எங்குதான் செல்வார்களோ மக்கள் இவ்வளவு சீக்கிரம்? ஜன்னலை படுத்தபடியே திறந்துவிட்டேன்... விட்டு விட்டு லேசாக காற்றடிக்கிறது..இதமாகத்தான் இருக்கிறது. அதற்கு என் மேல் உள்ள காதலும் கோபமும் அதன் வேகத்தில் தெரிகிறது. வியர்க்க வைத்து பின் இதமான காற்றடித்து என்னிடம் விளையாடிப் பார்க்கின்றது...மின்சாரம் இல்லாத நேரங்களில் தான் காற்றின் அருமையை அதன் காதலையும் உணர்கிறேன். தினமும் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டும். பக்கத்து வீட்டில் பால் குக்கர் கத்துகின்றது.. மனித படைப்புகளின் சத்தம் அவ்வளவு அழகாக இல்லை..அவைற்றின் சத்தங்களில் எந்த உணர்ச்சியும் என்னால் உணரமுடிவதில்லை என்பதனாலோ என்னவோ..இப்போது காகங்களுடன் ஒரு கிளி போட்டி போட்டு கத்துகிறது.தினமும் சீக்கிரம் முழிக்க வேண்டும்.. நன்றாகத்தான் இருக்கிறது கேட்பதற்கு. இப்போது கண் முழித்து விட்டேன்.. கடிகாரம் மணி ஆறு காட்டுகிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை அவன் ஊரில் இன்னும் மின்வெட்டு இல்லை போலும் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான் ஆனந்தமாய்.. பேப்பர் போடும் சிறுவன் மடித்து எறியும் தினசரி எதிர்த்த வீட்டு வாசலில் படாரென்று விழுகின்றது.. லேசாக சிரித்துக்கொண்டே போகிறான்..அவன் அவ்வளவு எத்தனிக்க வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கையில் அந்த வீட்டு நாய் வெளியே வந்து அவனை பார்த்து முறைக்கின்றது.. அவன் செயலின் காரணமும் அந்த குறுநகையின் அர்த்தமும் அப்போது புரிகின்றது. சூரியன் முழித்து விட்டான்...வானம் சிவக்கின்றது கிழக்கே...அட காற்றாடி சுற்றுகிறது.. மின்சாரம் வந்துவட்டது..
தூக்கம் வரவில்லை கண்மூடி கவனிக்கிறேன் வேறென்ன கேட்கிறது என்று...இந்த ஞாயிற்றுக்கிழமை காலை வாரம் முழுக்க நினைவில் இருக்கும்..
Thursday, July 10, 2014
அது ஒரு புது இரவு!
Saturday, March 22, 2014
உந்தன் வாசம்
எதிலும் நிறைகிறது உன் முகம்
இருட்டிலும் தெரிகிறது உன் நிழல்
காற்றில் வருகிறது உன் வாசம்
இன்றும் என்றும் என் வாழ்வில்
வந்து போகும் அத்தனை மகிழ்ச்சியிலும்
உந்தன் வாசம் தினமும் வீசும்..
உண்மையில் நீ இல்லை
கண்ணில் நீர் வழிய
மனதில் சஞ்சலத்துடன்
மருகி மன்றாட
உறக்கம் உணராமல்
உந்தன் பெயரை நொடிக்கொருமுறை
உதடு சொல்ல
கண்ணிமைக்கும் பொழுதில்
கணநொடியில் வாழ்வை நீ
தட்டி பறிக்க
விழித்திருந்தும் விடையில்லை
உண்மையில் நீ இல்லை!
Friday, March 21, 2014
சிறகுகள் முளைக்கும்
குஞ்சு பொரித்ததும் மறைத்து காத்து
குழந்தை போல வளர்க்கலாம் கொஞ்சகாலம்
நித்தம் நித்தம் அது தானாய் வளரும்
கேள்வி கேட்டு தினம் நச்சரிக்கும்
கொஞ்ச காலம் தத்தளிக்கும்
காவலில் இருப்பதை கண்டுபிடிக்கும்
செய்வதரியாது முரண்டு பிடிக்கும்
முட்டிமோதி அட ஆர்ப்பரிக்கும்
ஆசை கனவை அடைய நினைக்கும்
வண்ண வண்ணமாய் சிறகும் முளைக்கும்
வெடவெடவென விண்ணில் பறக்கும்
வானவில்லையும் வளைத்து ஒடிக்கும்..
Tuesday, February 18, 2014
கலிகாலம் கலிகாலம்!!!!
கணவன் சொன்னால் கட்டையில் ஏற வேண்டும் என்பதை ஆரம்பித்தவள் அவள்
கணவன் பின்னால் கேள்வியின்றி நடக்க வேண்டும் என்பதை நியதியாக்கியவள் அவள்
கண்ணகி கணவனை கண்டித்திருக்க வேண்டும்
சீதையின் கதை புராணம்
கண்ணகியின் கதை காவியம்
கலிகாலம் கலிகாலம்
Thursday, January 16, 2014
உலகின் முதல் தொடர்கதை
அலை நீள சேலை அளித்து அனைவர்
முன் ஆடை களைய வைத்து
துருபதன் மகள் திக்குமுக்காட
திருதராட்டினன் சபையில்
நடந்ததுதான் உண்மையில்
உலகின் முதல் தொடர்கதை!