Saturday, February 7, 2015

கல்யாணம் எங்க வீட்டுல! வந்திரனும்

நம்ம ஆட்களா இருக்க போய் பரவாயில்ல. அந்த பிள்ளை பய கூடத்தான் வேல பாக்கா.அந்த எழவெடுத்த ஊருல எங்க போய் விசாரிக்க குடும்பத்த பத்தி. என்னத்த செய்வாங்க.. நம்ம ஊருலனா கல்யாணம் காய்ச்சி முடிச்சி வளைகாப்பு, பிள்ளை பிறப்பு,பொட்டபிள்ளனா வயசுக்கு வந்தா,மாமன்மாமியா சாவுக்குன்னு எத்தனை கட்டுக்கு செய்வாங்க..இனி ஒன்னும் கிடையாது அந்த பயலுக்கு. பாத்ததும்தான் பார்த்தான் பக்கத்துல எந்த ஊருலயாச்சும் பாத்திருக்கலாம் இல்லைனா நம்ம ஊருல இல்லாத பொண்ணா? எத்தன அழகழகு பிள்ளைகள் காலேஜுல படிக்கு  அதவுட்டுபுட்டு பாத்திருக்கான் கீழக்காட்டுல. நானும் என் வீட்டுக்காரரும் பிள்ளைய பார்க்கவே இல்லை இன்னமும்.. என் மவளும் மருமக்கமாரும் போய் பூவச்சிட்டு வந்தளாளுவ போன வாரம்.

திங்ககிழமை பட்டுகட்டி கைமாறுதோம் கண்டிப்பா வந்திரனும்.சித்திரை பொறந்ததும் கல்யாணம்.. கண்டிப்பா வந்துரனும்..